கொரோனா சான்றிதழை வைத்து இப்படியுமா மோசடி செய்வீங்க? அதிர்ச்சியில் ஐயப்ப பக்தர்கள்
கோட்டயம்: சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொரோனா சான்றிதழ் மோசடிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மண்டல பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கேரளா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாள்தோறும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால்தான் சபரிமலை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கேரளா பரிசோதனை மையங்களில் எடுத்த கொரோனா சான்றிதழை உரிய அதிகாரிகளிடம் காட்டினர்.
ஆனால் இந்த சான்றிதழ்கள் போலியானவை என தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் கோட்டயத்தில் உள்ள பரிசோதனை மையத்தில் இந்த சான்றிதழ் பெறப்பட்டது தெரியவந்தது.
விவசாய சட்டங்களுக்கு எதிரான கேரளா சட்டசபை தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ. அதிரடி ஆதரவு
நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை மையங்களில் பணியாற்றிய ஊழியர்களே இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தற்போது இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.