திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. கேரளாவில் உச்சம் பெறும் கொரோனா.. பின் தொடரும் கர்நாடகா!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 118 ஆகியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 127 பேர் பாதித்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 606 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 46 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது போக இந்தியாவில் மொத்தம் 10 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று காலை கொரோனா காரணமாக ஒருவர் பலியானார்.

விழித்திரு: விலகி இரு: வீட்டில் இரு.. கொரோனாவிற்கு எதிராக முதல்வர் திட்டம்.. ரூ.3,780 கோடி ஒதுக்கீடுவிழித்திரு: விலகி இரு: வீட்டில் இரு.. கொரோனாவிற்கு எதிராக முதல்வர் திட்டம்.. ரூ.3,780 கோடி ஒதுக்கீடு

வேகமாக முன்னேறும் கர்நாடகா

வேகமாக முன்னேறும் கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் 51 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இன்று மட்டும் புதிதாக 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கர்நாடகாவில் பெங்களூரில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு கொரோனா குணப்படுத்தப்பட்டு வீட்டிற்கு சென்று உள்ளனர்.

மிக மோசம்

மிக மோசம்

மகாராஷ்டிராவும், கேரளாவும் கொரோனா காரணமாக அதிகமாக பதித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா மூலம் மகாராஷ்டிராவில்தான் அதிக பேர் பாதித்து இருக்கிறார்கள். கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் மொத்தம் 127 பேர் பாதித்து இருக்கிறார்கள். இன்று மட்டும் அங்கு 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் மொத்தம் 2 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா நிலை

கேரளா நிலை

மகாராஷ்டிராவிற்கு அடுத்து கேரளாவில் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் கேரளாவில் 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இன்று காசர்கோட்டில் மட்டும் 4 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. கேரளாவில் மொத்தமாக 118 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. இதுவரை 12 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 112 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எத்தனை பேர் இருக்கிறார்கள்

எத்தனை பேர் இருக்கிறார்கள்

76,542 பேர் கொரோனா காரணமாக மொத்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 76,010 வீட்டு காவலில் இருக்கிறார்கள். 532 பேர் மருத்துமனையில் இருக்கிறார்கள். இன்று புதிதாக கொரோனா ஏற்பட்ட 9 பேரில் 4 பேர் துபாயில் இருந்து வந்தவர்கள். ஒருவர் லண்டனில் இருந்து வந்தவர். ஒருவர் பிரான்சில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: Kerala, Karnataka, and Maharashtra are the most affected states in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X