திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும் போல இன்றும் காசர்கோட்டில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    பிளான் 'சி' திட்டத்தை கையில் எடுக்கும் கேரளா? என்ன அது?

    கொரோனா வைரஸ் இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 18 பேர் பலியாகி உள்ளனர்.

    தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். இந்தியாவில் இனி வரும் நாட்களில் கொரோனா வேகம் எடுத்து தீவிரமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐசிஎம்ஆர் அனுமதி லேட்.. போலீஸ் அடிக்கிறார்கள்.. கொரோனா டெஸ்ட் செய்யும் தனியார் லேப்கள் குமுறல் ஐசிஎம்ஆர் அனுமதி லேட்.. போலீஸ் அடிக்கிறார்கள்.. கொரோனா டெஸ்ட் செய்யும் தனியார் லேப்கள் குமுறல்

    கேரளா நிலைய

    கேரளா நிலைய

    இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விண்ணை தொட்டுள்ளது. அங்கு இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும் போல இன்றும் காசர்கோட்டில்த்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்று மட்டும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மொத்தமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முதல் இடம்

    முதல் இடம்

    இதனால் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 125 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அதில் 122 பேர் மருத்துவமனையில் உள்ளனர். ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

    அதிக நபர்கள்

    அதிக நபர்கள்

    கேரளாவில் காசர்கோட்டில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தற்போது அருகிலேயே இருக்கும் கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு பரவி உள்ளது .காசர்கோடு மாவட்டத்தில் மூன்று பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருச்சூரில் இரண்டு பேருக்கும், இடுக்கி மற்றும் வயநாட்டில் தலா ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

    எத்தனை பேர் கண்காணிப்பு

    எத்தனை பேர் கண்காணிப்பு

    கேரளாவில் இதுவரை 1,20,003 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். 1,01,402 பேர் வீட்டில் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதேபோல் 601 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். 136 பேர் மருத்துவனையில் இன்று மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் காசர்கோட்டிற்கு அண்டை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Coronavirus: So far 138 people affected with the pandemic COVID -19 in Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X