சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும்- தலைமை தந்திரி எச்சரிக்கை
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும் என்று தலைமை தந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் காலங்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகின்றன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஐயப்பன் கோயிலுக்குள் வரும் நவம்பர் 17-ஆம் தேதி முதல் அனுமதிக்க தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
[சூசைட் ஸ்குவாட்.. தூங்கும் புரட்சி.. பெண்கள் நுழைவை தடுக்க நடக்கும் புதுப்புது சபரிமலை போராட்டம்!]
எனினும் உச்சநீதிமன்றம் எந்த காலத்தை நிர்ணயிக்காததால் நாளை நடைதிறக்கும் நேரத்தில் பெண்கள் அங்கு செல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து தலைமை தந்திரி மகேஷ்வரரு கூறுகையில் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுவரையான பெண்களை அனுமதித்தால் வன்முறை வெடிக்கும். சபரிமலை மீது நம்பிக்கை இருப்பவர்கள், 2 100 ஆண்டு விதிக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்றார் தந்திரி.