கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா?
திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரம் கேரளாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி, உள்ளாட்சித் இடைத் தேர்தலில் 30 இடங்களில், 16 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 12 இடங்களைப் பெற்றது, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி (ஆர்.எம்.பி) மற்றும் காங்கிரஸ் எழுச்சி முறையே கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் ஒன்றியத்தில் உள்ள இடங்களை தக்க வைத்துக் கொண்டன.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த பாஜக இந்த தேர்தலில் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது, போட்டியிட்டு வென்ற இரண்டு இடங்களையும் இழக்காமல் தக்க வைத்துள்ளது.
சிபிஎம், ஆர்.எம்.பி. பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆர்.என்.பி யின் பி.ஜி. ஸ்ரீஜித் மட்டும் ஒன்பியம் பஞ்சாயத்தின் ஐந்தாவது வார்டை பெரும்பான்மையுடன் 308 வாக்குகளைப் பெற்று தக்கவைத்துக் கொண்டார். அதுவும், ஆர்.எம்.பி. உறுப்பினர் ஏ.கே. கோபினாதாவின் இறப்பு காரணமாக இந்தத் தேர்தல் முடிவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நவம்பர் 2018 வாக்கில் நடந்த தேர்தலின் போது, 39 இடங்களில் 21 இடங்களை எல்.டி.எஃப் வென்றது. யு.டி.எப் 12 இடங்களைக் கைப்பற்றியது, பா.ஜ.க இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.