ராயல் சல்யூட்.. கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இளைஞருக்கு.. கேரளாவில் நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நபர் இன்று வீடு திரும்பியபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் கைதட்டி அவருக்கு உற்சாகம் கொடுத்து அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
கேரளாவின் காசர்கோடு நகரத்தில் முதல்முறையாக இளைஞர் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் அவர் பரிபூரண குணம் அடைந்துள்ளார்.
இதையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது, முகத்தில் கவசம் அணிந்தபடி அவர் வெளியே வருகிறார். டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கைதட்டி அவரை உற்சாகமாக அனுப்பி வைக்கின்றனர்.
Every recovery is a triumph.
— Kadakampally Surendran (@kadakampalli) April 4, 2020
This man recovered from Covid19 and is getting discharged from the hospital. Cheered by patients and staff, this happy scene is from govt hospital, Kasargod, Kerala.#keralafightsCorona #Covid19India pic.twitter.com/pOxR1uMNLY
உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் பிரச்சினை மக்கள் மனதில் பெரும் சுமையாக மாறி உள்ளது. எனவே தான் மருத்துவமனையில் ஒருவர் குணமடைந்தால் கூட அதை கொண்டாட்டத்தோடு பார்க்கும் மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என்பதை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது.