திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி

6 கொலைகளையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டுள்ளார் ஜோலி

Google Oneindia Tamil News

Recommended Video

    Jolly Sensational Kerala Serial Killer Explained : கேரளாவை உலுக்கிய 6 சயனைடு கொலையில் தொடரும் அதிர்ச்சி !-வீடியோ

    திருவனந்தபுரம்: ஜோலி பயங்கர கிரிமினல் கில்லாடியாக இருந்திருக்கார் பாருங்க. விஷத்தை எப்படி கலப்பது என்பதில் கூட அவர் மிக மிக கவனமாக, நுணுக்கமாக செயல்பட்டுள்ளார். இது போலீஸாரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    சயனைடு விஷத்தை உணவில் கலந்துதான் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அவர் காலி செய்துள்ளார். அதை அவர் செய்த விதம், போட்ட ஸ்கெட்ச் எல்லாமே பயங்கரமாக இருக்கிறது.

    விஷத்தை கையில் எடுத்து உணவில் கலப்பதற்கு முன்பு கையில் சிறு கீறல் கூட இல்லாமல் கவனமாக இருந்துள்ளார் ஜோலி. காரணம், காயத்தின் வழியாக அவரது உடலுக்குள் விஷம் ஏறி விடக் கூடாது என்பதற்காகவாம்.

    சோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்புசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

    திட்டம்

    திட்டம்

    ஒவ்வொரு கொலையையும் மிக மிக தெளிவாக திட்டமிட்டு செய்துள்ளார் ஜோலி. உணவில் விஷம் கலப்பதற்கு முன்பு தனது கையில் எந்த சிறு கீறலும் இல்லாமல் கவனமாக இரு்திருக்கிறார். கொஞ்சம் போல சயனடை அள்ளி உணவில் கலந்து மிக்ஸ் செய்துள்ளார்.

    சேர்ந்து மது

    சேர்ந்து மது

    தனது மாமியாரின் சகோதரர் மாத்யூ மஞ்சடியில் என்பவரைக் கொல்ல மதுவை பயன்படுத்தியுள்ளார். மதுவில் சயனைடை கலந்து கொடுத்து அவரை காலி செய்தார். சாகடிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு இருவருமாக சேர்ந்து மது குடித்துள்ளனராம்.

    அதிர வைத்த ஜோலி

    அதிர வைத்த ஜோலி

    அதேபோல தனது 2வது கணவர் சாஜுவின் மனைவி சிலிக்கு மருந்தில் சயனைடு கலந்து கொடுத்து காலி செய்துள்ளார். இதற்கு சாஜுவும் உதவி செய்ததாக ஜோலி கூறியிருப்பது போலீஸாரை அதிர வைத்துள்ளது. தற்போது ஜோலிக்கு எதிரான அத்தனை ஆதாரங்களையும் திரட்டும் வேலையில் போலீஸார் இறங்கியுள்ளனர். ஆதாரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே ஜோலியை தண்டனைக்குள்ளாக்க முடியும் என்பதால் ஆதாரத்தை திரட்டும் வேலை தீவிரமாகியுள்ளது.

    குற்றப்பத்திரிகை

    குற்றப்பத்திரிகை

    6 இடங்களில் போலீஸார் ஆதாரத்தை திரட்டி வருகின்றனராம். எங்கெல்லாம் கொலை நடந்ததோ அங்கெல்லாம் ஜோலியைக் கூட்டிக் கொண்டு போய் போலீஸார் ஆதாரத்தை திரட்டி வருகின்றனர். அனைத்தும் கிடைத்த பின்னர் ஜோலிக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமாம்.

    English summary
    serial killer jolly confessed to kerala police on how cyanide was mixed in the food
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X