திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலையிலேயே உறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்.. திரும்பி வரும் போது மீண்டும் தடுத்து நிறுத்திய போலீஸ்!

நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிகாலை போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்- வீடியோ

    திருவனந்தபுரம்: நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிகாலை கேரள போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

    கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து நேற்று கோவிலுக்கு சென்றார். ஆனால் அவர் தொண்டர்களுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    டெல்டா மக்களுக்கு இப்படியும் உதவலாம்.. இறங்கி வாங்க எல்லோரும்.. சிம்புவின் பலே ஐடியாடெல்டா மக்களுக்கு இப்படியும் உதவலாம்.. இறங்கி வாங்க எல்லோரும்.. சிம்புவின் பலே ஐடியா

    பஸ்ஸில் சென்றார்

    பஸ்ஸில் சென்றார்

    இந்த நிலையில் கடைசியாக பொன்.ராதாகிருஷ்ணன் அரசு பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டது. அவர் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் சென்றார். மக்களோடு மக்களாக அவர் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

    எல்லோருடனும் மேலே தூங்கினார்

    எல்லோருடனும் மேலே தூங்கினார்

    அதன் பின் தரிசனம் முடித்த அவர் இரவு நேரம் என்பதால் கோவிலிலேயே தங்கினார். இரவில் அவர் கோவிலிலேயே தூங்கினார். அங்கு பக்தர்களுடன் சேர்ந்து அவர் தூங்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

    மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள்

    மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள்

    இந்த நிலையில் மீண்டும் அவர் அதிகாலையில் திரும்பும் போது, கேரளா போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று விவரங்கள் வெளியாகவில்லை. அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    காரில் சென்றார்

    காரில் சென்றார்

    அதன்பின் அவருடைய தனிப்பட்ட கார் அந்த பகுதிக்கு வந்தது. அந்த காரில் ஏறி நிலக்கல்லில் இருந்து அவர் திரும்பி வந்தார். இதனால் அதிகாலையில் அங்கு கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    English summary
    Kerala Police once again stops BJP minister Pon. Radhakrishnan at night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X