கேரளாவில் தொடர்ந்து விஸ்வரூபமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 9,347 பேருக்கு பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்து வருகிறது. இம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் 9437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் கேரளா 8-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாள்தோறும் கேரளாவில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கேரளாவில் அதிகரிப்பு
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் 9347 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கையானது 2,89,202 ஆக அதிகரித்திருக்கிறது.
கேரளா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 8924 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தும் உள்ளனர். கேரளாவில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் 1,91, 798 ஆக உயர்ந்திருக்கிறது.
கேரளா மரணங்கள்
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 1,003 ஆக உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச பாதிப்பு உள்ளது.
ஆக்டிவ் கேஸ்களில் 3-வது இடம்
இந்திய அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் - ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தற்போதைய நிலையில் கேரளா 3-வது இடத்தில் உள்ளது. கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 96, 316. மகாராஷ்டிராவும் கர்நாடகாவும் ஆக்டிவ் கேஸ்களில் முதலிடத்தில் உள்ளன.
தமிழகத்துக்கு சவால்
இதனிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தமிழகத்து சவாலாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், கேரளா- தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் இது சவாலானதாக இருக்கு என்றார்.