கேரளாவில் மீண்டும் விஸ்வரூபம்- ஒரேநாளில் 608 பேருக்கு கொரோனா
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் மேலும் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் பரவிய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்தியது கேரளா.
கேரளா மாடலை பயன்படுத்தி பல மாநிலங்களும் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டன. இந்த நிலையில் அண்மையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்க தொடங்கியுள்ளது.
தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா சோதனை- குஜராத், மே.வ.-ல் குறைவு
கேரளாவில் செவ்வாய்க்கிழமையன்று ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனாவால் 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8930 ஆக உள்ளது.
மேலும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் சிறப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.