திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கோல்டன்" ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா.. அதிர வைக்கும் தகவல்கள்

நடிகை பூர்ணாவை கடத்திய கும்பலுடன் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இப்போதைக்கு மிகப்பெரிய ஹாட் டாப்பிக்கே ஸ்வப்னாதான்.. தங்க கடத்தல் விவகாரத்தை கிண்ட போக, ஒவ்வொரு விஷயமும் வெடித்து கிளம்பி வருகிறது.. நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலுக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Recommended Video

    Gold Smuggling | Kerala அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள் |Swapna Suresh |Saritha Nair

    திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது... அதனால் சுங்க துறை அதிகாரிகளும் ஏர்போர்ட் சென்று அதிரடியில் இறங்கியதில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

     kerala swapna suresh: Swapna relationship with gangster who threatens actress poorna

    இந்த கடத்தலில் சிக்கியவர்கள் 2 பேர்.. ஒருவர் சரித், மற்றொருவர் ஸ்வப்னா சுரேஷ்.. கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னாவுக்கு இதில் எப்படி தொடர்பு என்பதை விசாரிக்க போய்தான் அடுத்தடுத்த பகீர்கள் கிளம்பி வருக்னறன.

    இதுவரை ஸ்வப்னாவை காணோம்.. அவரை தேடிவருகிறார்கள்.. ஆனால் அவர் வீட்டில் ஆய்வு செய்யப்பட்டதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.. கைதான சரித்திடம் விசாரணை நடக்கிறது.. இவர்கள் 2 பேரும் போனில் என்ன பேசினார்கள் என்ற விவரங்களின் அடிப்படையில் அந்த விசாரணை நடந்து வருகிறது.

    அமீரகத்தின் தூதரக ஆவணங்களை போலியாக ஸ்வப்னா தயாரித்து உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இவசர் 10வதுதான் படித்துள்ளார் என்று தகவலும் வெளியாகி உள்ளது.. இப்படி அடுக்கடுக்கான விஷயங்கள் வெளிவந்து வரும் நிலையில், மற்றொரு தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகையான பூர்ணாவை கடந்த சில நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டியது... அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. அந்த கும்பல் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்தது.. ஆனால் இப்போதுதான், தங்கம் கடத்திய ஸ்வப்னாவுக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என்று அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

    தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி? தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி?

    தங்க கடத்தலுக்காக மாடல் அழகிகள் மற்றும் நடிகைகளை அவர்கள் பயன்படுத்தியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கடத்தல் கும்பல் பற்றி போலீசார் சுங்க துறைக்கு சொல்லவும்தான், ஸ்வப்னாவுடன் தொடர்பு என்பதே அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

    ஒரு தூதரகத்தில் வேலை செய்யும் பெண்ணா இதையெல்லாம் செய்தார் என்று ஆச்சரியமாக உள்ளது.. இந்த ஆள் கடத்தல் கும்பலை வெளியே கொண்டு வர ஸ்வப்னா உதவியதாகவும் இருந்துள்ளார்.. காரணம், ஆளுங்கட்சியினர் தொடர்பில் உள்ளதாலேயே அந்த செல்வாக்கை பயன்படுத்தியே இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    English summary
    kerala swapna suresh: Swapna relationship with gangster who threatens actress poorna
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X