சபரிமலை.. பெய்லி பாலத்தை பார்வையிட்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.பாபு
சபரிமலை: கர்நாடகா மற்றும் கேரள பகுதியின் கமாண்டிங் மேஜர் ஜெனரல் கே.ஜே.பாபு சபரிமலையில், ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்பால் கட்டப்பட்ட பெய்லி பாலத்தை பார்வையிட்டார். பாலத்தின் நிலையை ஆய்வு செய்து, பருவமழைக்கு பிந்தைய காலத்தில் அதை பயன்படுத்துவது குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
அவருடன் பாங்கோடு ராணுவ நிலையத் தளபதி பிரிகேடியர் கார்த்திக் சேஷாத்ரியும் ஆய்வின் போது உடன் இருந்தார்.
சன்னிதானம் மற்றும் சந்திரானந்தன் சாலைகளை இணைக்கும் வகையில், ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் பெய்லி பாலத்தை கட்டியுள்ளது.
பெய்லி பாலம் என்பது ஒரு வகை சிறிய, வகை பாலம். இது இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
இதனிடையே, திருவாங்கூர் தேவசம் வாரியம் (டி.டி.பி) டிசம்பர் 2 முதல் தொடங்கிய ஆன்லைன் புக்கிங் அடிப்படையில், அதிக பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல அனுமதித்துள்ளது.
கேரளா உள்ளாட்சி தேர்தலால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சபரிமலைக்கு பக்தர்களை அதிகரிக்க அரசு மறுப்பு
திங்கள் முதல் வெள்ளி வரை, பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 1,000 முதல் 2,000 வரையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வார இறுதி நாட்களில், இந்த எண்ணிக்கை 2,000 முதல் 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.