சபரிமலை மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 19-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Recommended Video
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த டிசம்பர் 26-ந் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.
கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் குறைவான பக்தர்களே மண்டல பூஜைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாள்தோறும் 5,000 பக்தர்கள் வரை சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.
சனிப்பெயர்ச்சி 2020: சனிபகவானுக்கு பரிகார பூஜை - மார்கழி பவுர்ணமியில் முப்பெரும் யாகங்கள்
நாளை அதிகாலை முதல் ஜனவரி 19-ந் தேதி சுவாமி ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மகரவிளக்கு பூஜை முடிவடைந்த பின்னர் ஜனவரி 20-ந் தேதி கோவில் நடை மூடப்படும்.