திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவனந்தபுரத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் சந்திப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு-வீடியோ

    திருவனந்தபுரம்: இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் நதிநீர் பங்கீடு தொடர்பாக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    தமிழகம் மற்றும் கேரளா இடையே முல்லைப்பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், நதி நீர் பிரச்சனை பல ஆண்டுகளாக காணப்படுகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இன்று சந்தித்து பேச முடிவு செய்தனர்.

    முதல்வர் பயணம்

    முதல்வர் பயணம்

    இந்நிலையில் இரண்டாவது முறையாக தமிழகம் கேரளா இடையே இன்று(செப்.25) பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை 10மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

    அதிகாரிகள் பயணம்

    அதிகாரிகள் பயணம்

    அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றனர்.

    சந்தித்து பேச்சுவார்த்தை

    சந்தித்து பேச்சுவார்த்தை

    சற்று முன்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவை, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அரசு அதிகாரிகள் சந்தித்தனர்.

    தீர்வு தேடி பேச்சுவார்த்தை

    தீர்வு தேடி பேச்சுவார்த்தை

    இரு மாநில அரசு சார்பில் நடந்து வரும் இப்பேச்சுவார்த்தையில் முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம், ஆனைமலை-பாண்டியாறு-புன்னம்புழா இணைப்பு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒடும் நதியில் நீர் பங்கிடு தொடர்பாக குழு அமைக்க இரு மாநில முதல்வர்களும் ஒப்புக்கொணடனர்.

    English summary
    Kerala: Meeting between Chief Minister of Kerala Pinarayi Vijayan and Chief Minister of Tamil Nadu Edappadi K. Palaniswami underway in Trivandrum, over interstate river water issues
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X