எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கேரளாவில் கைது
Recommended Video
திருவனந்தபுரம்: தமிழக எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கேரளாவில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 8-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கர்நாடகாவின் உடுப்பில் பதுங்கியிருந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த மேலும் பலரும் அடுத்தடுத்து சிக்கினர். இவர்கள் மீது ஊபா சட்டம் பாய்ந்துள்ளது.
கன்னியாகுமரி தனிப்படை போலீசார் இவ்வழக்கை விசாரித்த நிலையில் அனைத்து வழக்குகளும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் குற்றவாளிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் தலைமறைவாக்க உதவியதாக கேரளாவில் சையது அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்தான் குற்றவாளிகள் இருவருக்கும் கேரளாவில் வீடு எடுத்து கொடுத்தவர் எனவும் கூறப்படுகிறது.