கேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்!
திருவனந்தபுரம்: கேரளத்தில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த ஆண்டு வந்த தென்மேற்கு பருவமழையை போல் இந்த ஆண்டும் கொட்டி தீர்த்து மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் முழுவதும் மழையால் 92 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் காணாமல் போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!
சாலைகள், தாழ்வான பகுதிகளில் 3, 4 அடிக்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளத்தில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணனூர், காசர்கோட் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.