ஓ இதுதான் கலவரமா? மலப்புரத்தில் வலதுசாரிகள் நடத்திய மாஸ் போராட்டம்.. நிற்காம ஓடு, ஓடு!
கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
கேரளாவில் இன்று வலதுசாரி அமைப்பினர் பந்த் நடத்தி வருகிறார்கள். சபரிமலைக்குள் பெண்கள் இருவர் சென்று தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
மக்களுக்கு உதவி
இந்த போராட்டத்தின் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடாது என்று கம்யூனிஸ்டுகள் நிறைய வாகனங்களை வைத்து மக்களுக்கு உதவிக் கொண்டு இருந்தனர். கார்களில் மக்களை கொண்டு செல்வது, கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, பஸ்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்று நிறைய வேலைகளை செய்தனர்.
சண்டை
கம்யூனிஸ்டுகளின் இந்த செயலால் பல இடங்களில் அவர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையில் பிரச்சனை வந்தது. கொல்லம் உள்ளிட்ட சில இடங்களில் வெளிப்படையாக இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டனர். சில இடங்களில் போலீஸ் மீதும் இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.
வீடியோ வெளியானது
இந்த நிலையில் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே நூற்றுக்கணக்கில் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக டிராபிக் மொத்தம் நிறுத்தப்பட்டுள்ளது. 100 பேர் வரை இப்படி கத்திக் கொண்டே வருகிறார்கள்.
|
என்ன ஓட்டம்
அந்த நேரம் பார்த்து, சரியாக அங்கே வந்த கம்யூனிஸ்டுள் போராட்டக்காரர்களின் பைக்குகளை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். இதனால் பயந்த போராட்டக்காரர்கள் மொத்தமாக பைக்கை போட்டுவிட்டு காணாமல் போனார்கள். 30 நொடியில் இருந்தவர்கள் எல்லாம் மொத்தமும் காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.