கேரள பாஜக பொதுச்செயலாளர் கைது எதிரொலி.. இன்று கேரளாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த பாஜக திட்டம்!
சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கேரளா முழுக்க பெரிய அளவில் போராட்டம் நடத்த பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கேரளா முழுக்க பெரிய அளவில் போராட்டம் நடத்த பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது. கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் கைதை தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளது.
நேற்று முதல்நாள் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் திறக்கப்பட்டது. இந்த முறை கோவில் 41 நாட்கள் திறந்து இருக்கும். இது மிக முக்கியமான பூஜையாகும்.
இதனால் இந்துத்துவா அமைப்புகள் இந்தமுறையும் பெண்களை நுழைவிற்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தியது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
கஜா புயல் நிவாரண பணிகள் எந்தளவில் உள்ளது.. முதல்வர் பழனிச்சாமி அறிக்கை!
உள்ளே செல்ல முயன்றார்
இந்த நிலையில் சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு பாஜகவினர் கூட்டம் கூட்டமாக நேற்று மாலை கோவிலுக்குள் வந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோவிலுக்குள் செல்ல முயன்று இருக்கிறார்கள். கோவிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவர்கள் முயன்றதாக கூறப்படுகிறது.
போலீஸ் கைது
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தை கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் முன்னின்று நடத்தினார். அதனால் அவரும் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு அவர் கஸ்டடியில் எடுக்கப்பட்டார்.
பெரிய போராட்டம்
இதையடுத்து கேரளாவில் மாநிலம் முழுக்க இன்று போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் கைதை தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளது. மாநிலம் முழுக்க பாஜகவினர் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது.
என்ன திட்டம்
பினராயி அரசின் செயலை கண்டித்து இன்று போராட்டம் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. கடை அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.