BREAKING NEWS LIVE - சபரிமலை.. முழு அடைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை.. பதற்றம்
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
நேற்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்தனர். இந்த நிலையில் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இதனால் கேரளாவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
பந்த் காரணமாக கேரளாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Kerala: United Democratic Front to observe 'black day' in the state in connection with Sabarimala Temple women entry issue; Visuals from Thiruvananthapuram pic.twitter.com/YOfcRVKNge
— ANI (@ANI) January 3, 2019