கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 5-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இதனால் கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை எச்சரிக்கை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று கேரளாவில் தொடங்கியது.
தீவிரம் அடைகிறது.. விரைவில் வரும் நிசார்கா புயல்.. செம மழை பெய்ய போகிறது.. கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்
இதனால் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டியது. இதனிடையே திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்பதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.