3ம் அணிக்கு அடிபோடும் சந்திரசேகர ராவ்.. இன்று பினராயி விஜயனை சந்திக்கிறார்.. பலே திட்டம்!
கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கிறது. இன்று ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இன்னும் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் மட்டுமே நடக்க உள்ளது.
இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இந்த கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள் யாருக்கு ஆதரவு தரும் என்பதை பொறுத்தே ஆட்சி அமையும் என்கிறார்கள்.
இதனால் மாயாவதி, மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் ஆகியோர் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவர்கள் யார் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கிறார்கள் என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில்தான் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
நம்பர் 1 ஊழல்வாதி என்ற பட்டத்துடன் உங்க அப்பா இறந்தார்.. ராகுலை கடுமையாக சீண்டிய மோடி!
லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்தும் இவர்கள் ஆலோசிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க, சந்திரசேகர ராவ் முயன்றார்.
அப்போது இவர் உத்தர பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்தித்தார். அதேபோல் மமதா பானர்ஜி, பிஜு பட்நாயக் ஆகியோரையும் சந்தித்து பேசினார். வரும் மே 21ம் தேதி எதிர்க்கட்சிகள் சில தங்கள் பிரதமரை தேர்வு செய்ய இருக்கிறார்கள.
இந்த நிலையில் அதற்கு முன்பாகவே இவர் கேரள முதல்வரை சந்தித்து பேசுவது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.