திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை: அதிகாலையில் நுழைந்த 2 பெண்கள்.. போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம்!

சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து தரிசனம் செய்ததாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sabarimala temple:அதிகாலையில் நுழைந்த 2 பெண்கள்?

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து தரிசனம் செய்தனர். இதனால் சபரிமலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரியினர் கேரளாவில் பெரிய போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக கடுமையாக போராடினார்கள். இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

    இதுவரை

    இதுவரை

    இந்த தீர்ப்பிற்கு பின் பல முறை தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை 50 வயதிற்கும் குறைவான ஒரு பெண் கூட கோவிலுக்கு நுழைய முடியவில்லை. கடும் போராட்டம் காரணமாக யாரும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.

    அதிகாலை சென்றனர்

    அதிகாலை சென்றனர்

    இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து தரிசனம் செய்தனர். மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

    தரிசனம் செய்தனர்?

    தரிசனம் செய்தனர்?

    இவர்கள் காலை 3.45 மணிக்கு கோவிலுக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு போராட்டக்காரகள் யாருமில்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே சென்ற இவர்கள் அங்கு தரிசனம் செய்தனர். ஆனால் இதுகுறித்து கேரள அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

    வீடியோ வெளியானது

    இதுகுறித்து முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தற்போது வீடியோக்களும் வெளியாகி உள்ளது. பெண்கள் கோவிலுக்குள் சென்ற பிரகாரத்தில் சுற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

    English summary
    Two women reportedly entered the Sabarimala temple. Kanakadurga and Bindu entered the temple today morning with police escort. It is their second attempt to enter the temple. Dec 24 they had reached till Pamba but backed out after massive protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X