காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு நேராக விளக்கு எரிகிறது.. கேரளத்தில் வாக்குப் பதிவு நிறுத்தம்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கேரளத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவளம் அருகே அமைக்கப்பட்டிருந்த 151-ஆவது வாக்குச் சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்தது.
ஓட்டுப் போட்டாச்சு.. விவிபாட்டில் என்ன தெரியுது.. ஆ.. பாம்பு வருதே.. அலறிய வாக்காளர்கள்.. கேரளாவில்!
இதையடுத்து வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புகாரால் பரபரப்பு எழுந்தது.