திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பெல்லாம் நீலமாக மாற.. 2 முறை அடுத்தடுத்து கொத்திய பாம்பு.. பரிதாபமாக உயிரிழந்த உத்ரா

2 முறை பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: உடம்பெல்லாம் உத்ராவுக்கு புளூ கலராகிவிட்டது.. வாயில் நுரை தள்ளியபடியே பெட்ரூமிலேயே இறந்திருக்கிறார்.. ஒரே ரூமில் 2 முறை பாம்பு இளம்பெண் உத்ராவை விஷ பாம்பு கடித்துள்ளது.. முதல்முறை உயிர்பிழைத்த உத்ரா, 2வது முறை பாம்பு கடித்தபோது பரிதாபமாக மரணமடைந்தார்.. இந்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Recommended Video

    பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. இவரது கணவன் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது.. ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், போன மாதம் ஒருநாள் இரவு உத்ரா தூங்கி கொண்டிருந்தார்.. அப்போது திடீரென எழுந்து அலறி சத்தம் போட்டார்.. காலில் ஏதோ கடித்துவிட்டது என்று துடித்தார்.. இதை பார்த்து பதறிய கணவனும் உத்ராவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றார்.. அப்போதுதான், அணலி வகை பாம்பு ஒன்று உத்ராவை கடித்திருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

    மகிழ்ச்சியான செய்தி.. கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்புமகிழ்ச்சியான செய்தி.. கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

    உத்ரா

    உத்ரா

    இதையடுத்து, திருவல்லாவில் ஒரு ஆஸ்பத்திரியில் 16 நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன்பிறகு வீட்டிற்கு திரும்பினார் உத்ரா. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி திரும்பவும் பாம்பு கடித்தது.. ஆனால் இந்த முறை உத்ராவை காப்பாற்ற முடியவில்லை.. வாயில் நுரை தள்ளியிபடியே அவரது உடல் பிரிந்துவிட்டது.. அந்த பகுதி மக்கள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே இது அதிர்ச்சியை தந்தது.

    ஏசி ரூம்

    ஏசி ரூம்

    அது எப்படி ஒரே ரூமில் உத்ராவை 2 முறை பாம்பு கடிக்கும் என்று சந்தேகம் எழுந்தது.. அதனால், உத்ராவின் சொந்தக்காரர்கள் போலீசில் புகாரும் தந்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொன்னார்கள். மேலும் அவர்கள் இதை பற்றி சொல்லும்போது, "உத்ரா ரூம் 2-வது மாடியில் இருக்கிறது.. அது ஏசி ரூம்.. ஏசி இருப்பதால் ஜன்னல்கள் கூட திறக்க வாய்ப்பு இல்லை.

    ஆஸ்பத்திரி

    ஆஸ்பத்திரி

    உத்ராவை பாம்பு கடித்த 2 முறையும், சூரஜ்தான் அந்த ரூமில் படுத்திருந்திருக்கிறார்.. 2 பேரும் ஒரே ரூமில் படுத்திருந்தபோது, பாம்பு கடித்த அன்று விடிகாலை 5.30 மணிக்கே சூரஜ் எழுந்து வெளியே போய்விட்டார்.. ரொம்ப நேரம் கழித்து, உத்ராவின் அம்மா அவரை எழுப்ப சென்றபோது, மகள் சடலமாக கிடப்பதை கண்டு அலறினார.. அப்போதே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம்.. ஆனால் உயிர் அந்த ரூமிலேயே போயிடுச்சு.. அதுக்கப்பறம் டிரெஸ்ஸிங் ரூமில் அந்த பாம்பு இருந்தது.

    விஷப்பாம்புகள்

    விஷப்பாம்புகள்

    அது மூர்க்கன் வகை என்று சொல்கிறார்கள்.. கடித்த 2 பாம்புகளே விஷம் இருக்கிற பாம்புதான்.. எப்படி ஒரே ரூமில் 2 முறை பாம்பு கடிக்கும், இதுதான் எங்கள் சந்தேகம்... முதல்முறை பாம்பு கடிக்கும்போதே, சூரஜ்தான் அந்தபாம்பை கையிலேயே பிடிச்சு ஒரு கோணிப்பையில் போட்டுட்டு வெளியே எடுத்துட்டு போனார்.. விஷ பாம்பை எப்படி அவர் அசால்ட்டா கையில் தூக்கிட்டு போக முடியும்னு அப்பவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது.

    கண்ணீர்

    கண்ணீர்

    உத்ரா கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போட்டோம், கார் தந்தோம், பணம் தந்தோம்.. இன்னும் நகை, பணம் வேணும் என்று சூரஜ் கேட்டு கொண்டிருப்பதாக உத்ரா அழுது எங்ககிட்ட சொல்லியிருக்கிறாள்.. அதனால் அவள் சாவில் உரிய விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்" என கண்ணீருடன் சொன்னார்கள்.

    English summary
    kollam Woman's death due to snakebite and family alleges mystery files complaint against her husband
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X