Breaking News Live: பசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள்.. பாஜக பெரும் போராட்டம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் இன்று அதிகாலை 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் சென்று பூஜை நடத்தி விட்டு திரும்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதையடுத்து பெண்கள் சிலர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை ஆண் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். எனவே, இத்தனை நாட்களாக 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாதநிலையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று பூஜை நடத்தி விட்டு திரும்பியுள்ளனர்.
அந்த நேரத்தில் அங்கு பக்தர்கள் கூட்டம் மிக குறைவாக இருந்ததை பயன்படுத்தி பெண்களை போலீசார் சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் பக்தர்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பெண் போராளிகள் இந்த சம்பவத்தை கொண்டாடி வருகின்றனர்.