லவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்!
காதலியை தீ வைத்து எரித்து காதலன் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
திருவனந்தபுரம்: "என்னை லவ் பண்ண போறியா இல்லையா தேவிகா" என்று கேட்டபடியே 17 வயது பெண் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டார் இளைஞர் ஒருவர்!
கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த ஷாலன் என்பவரது மகள் தேவிகா. 17 வயதுதான் ஆகிறது. அங்குள்ள ஒரு ஸ்கூலில் பிளஸ்-2 படித்து வந்தாள்.
இவரை ஒரு பெயிண்டர் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். அவர்பெயர் மிதுன். எர்ணாகுளம் வடக்கு பரவூரை சேர்ந்தவர். ஆனால் மிதுனை தேவிகாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரது காதலை ஏற்க முடியாது என்று பலமுறை சொல்லிவிட்டார்.
ஆனாலும் பெயிண்டர் விடவே இல்லை. தேவிகாவின் பின்னாடியே போய் தன் காதலை ஏற்று கொள்ளுமாறு வற்புறுத்தியே வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்துவிட்டார்.
அதனால், இன்று விடிகாலை ஒரு மணி இருக்கும்.. மிதுன் கையில் பெட்ரோல் கேனுடன் தேவிகா வீட்டிற்குள் நுழைந்து விட்டார். வீட்டில் பெற்றோர், மற்றவர்கள் இருப்பார்களே என்று நினைக்கவே இல்லை. தேவிகா வீட்டு கதவை பலமாக தட்டினார்.
குடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்
அப்போது, தேவிகாவின் அப்பா ஷாலன் கதவை திறந்தார். ஆனால் அவரை கீழே தள்ளி விட்டு தேவிகா படுத்திருந்த பெட்ரூமுக்குள் நுழைந்தார் மிதுன். சத்தம் கேட்டு அலறி அடித்து எழுந்த தேவிகா மீது கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில், தேவிகா அலறி நெருப்பில் துடித்தார்.
இதை பார்த்ததும், மிதுன் மீதமிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் 2 பேருமே கதறினர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்க முயன்றனர். ஆனால் தேவிகா அங்கேயே கருகி இறந்துவிட்டார். மிதுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதுமே இறந்துவிட்டார். இந்தசம்பவம் காக்கநாடு பகுதியை அதிகமாக உலுக்கி உள்ளது.