பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக்கூடாது.. ஜீன்ஸ் பேண்ட் அணியவும் தடை.. பார் கவுன்சில் உத்தரவு!
சென்னை: நீதிமன்றங்களுக்கு செல்லும் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் அணியக்கூடாது என்றும், பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என்றும் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி வழக்கறிஞர்கள் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தங்கள் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வழக்கறிஞர்கள் அணியும் ஆடைகள் அல்லது கவுன்களின் வடிவம் இந்திய பார் கவுன்சில் விதிகளின் படி இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கண்ணியமாக ஆடைகளை அணிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண் வழக்கறிஞர்களைப் பொறுத்தவரை, வக்கீல்களின் கவுன்களுடன் கூடிய கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, வெள்ளை சட்டை அணிய வேண்டும் என்றும், வக்கீல் கவுன்களுடன் முழு நீள கருப்பு அல்லது வெள்ளை பேண்ட் அணிந்துவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் வழக்கறிஞர்கள் கருப்பு முழுக்கை ஜாக்கெட், வெள்ளை பட்டைகள் மற்றும் வழக்கறிஞர்கள் கவுன்கள், வெள்ளை ரவிக்கை, காலர் கொண்ட அல்லது இல்லாத வெள்ளை பட்டைகள் மற்றும் கருப்பு கோட் அணிய வேண்டும், அல்லது புடவைகள் அல்லது நீளமான ஓரங்கள், அச்சு அல்லாத வடிவமைப்பு இல்லாமல் வெள்ளை அல்லது கருப்பு அல்லது ஏதேனும் மெல்லிய அல்லது அடக்கமான நிறம் கொண்ட உடை அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபி உடையான சுரிதார்- குர்தா அல்லது சல்வார்-குர்தா துப்பட்டாவுடன் அல்லது துப்பட்டா இல்லாமல் அல்லது கருப்பு கோட் மற்றும் பட்டைகள் கொண்ட பாரம்பரிய உடை அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜீன்ஸ் அணிவது, கேப்ரி பேன்ட், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்றவை கண்டிப்பாக அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எல்லா நேரங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட உடையில் மட்டுமே ஆஜராக வேண்டும், உரிய ஆடை விதிகளின்படி, ஆஜராக வேண்டியது அனைத்து வழக்கறிஞர்களின் கடமை என்றும், வக்கீல்கள் சட்டம், 1961 இன் பிரிவு 35இன் கீழ் எந்த மீறலும் தொழில்முறை தவறான நடத்தைக்கு சமம் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்திய பார் கவுன்சில் அல்லது நீதிமன்றம் பரிந்துரைக்கும் சம்பிரதாய நிகழ்வுகள், நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications