பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக்கூடாது.. ஜீன்ஸ் பேண்ட் அணியவும் தடை.. பார் கவுன்சில் உத்தரவு!
சென்னை: நீதிமன்றங்களுக்கு செல்லும் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் அணியக்கூடாது என்றும், பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என்றும் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி வழக்கறிஞர்கள் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தங்கள் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வழக்கறிஞர்கள் அணியும் ஆடைகள் அல்லது கவுன்களின் வடிவம் இந்திய பார் கவுன்சில் விதிகளின் படி இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கண்ணியமாக ஆடைகளை அணிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண் வழக்கறிஞர்களைப் பொறுத்தவரை, வக்கீல்களின் கவுன்களுடன் கூடிய கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, வெள்ளை சட்டை அணிய வேண்டும் என்றும், வக்கீல் கவுன்களுடன் முழு நீள கருப்பு அல்லது வெள்ளை பேண்ட் அணிந்துவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் வழக்கறிஞர்கள் கருப்பு முழுக்கை ஜாக்கெட், வெள்ளை பட்டைகள் மற்றும் வழக்கறிஞர்கள் கவுன்கள், வெள்ளை ரவிக்கை, காலர் கொண்ட அல்லது இல்லாத வெள்ளை பட்டைகள் மற்றும் கருப்பு கோட் அணிய வேண்டும், அல்லது புடவைகள் அல்லது நீளமான ஓரங்கள், அச்சு அல்லாத வடிவமைப்பு இல்லாமல் வெள்ளை அல்லது கருப்பு அல்லது ஏதேனும் மெல்லிய அல்லது அடக்கமான நிறம் கொண்ட உடை அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபி உடையான சுரிதார்- குர்தா அல்லது சல்வார்-குர்தா துப்பட்டாவுடன் அல்லது துப்பட்டா இல்லாமல் அல்லது கருப்பு கோட் மற்றும் பட்டைகள் கொண்ட பாரம்பரிய உடை அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜீன்ஸ் அணிவது, கேப்ரி பேன்ட், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்றவை கண்டிப்பாக அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எல்லா நேரங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட உடையில் மட்டுமே ஆஜராக வேண்டும், உரிய ஆடை விதிகளின்படி, ஆஜராக வேண்டியது அனைத்து வழக்கறிஞர்களின் கடமை என்றும், வக்கீல்கள் சட்டம், 1961 இன் பிரிவு 35இன் கீழ் எந்த மீறலும் தொழில்முறை தவறான நடத்தைக்கு சமம் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்திய பார் கவுன்சில் அல்லது நீதிமன்றம் பரிந்துரைக்கும் சம்பிரதாய நிகழ்வுகள், நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications