தமிழிசை துணிச்சலான பெண்.. மதுரையிலிருந்து பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Recommended Video
மதுரை: தமிழிசை சௌந்தரராஜன் துணிச்சலான பெண் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
மதுரை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது எனது வாழ்த்துக்களை முழுமையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடன் பல்வேறு கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நல்ல துணிச்சலான நபர். அவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இளங்கோவன்.
அரசியல் சார்ந்த அவருக்கு ஆளுநர் பதவி கொடுப்பது சர்க்காரியா கமிஷன் கமிஷனுக்கு புறம்பானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார் குறித்த கேள்விக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவருடைய கருத்தை கூறியுள்ளார். என்னை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சியில் கடுமையாக உழைப்பாளியாக அவருக்குக் கிடைக்கப்பெற்ற இருப்பது நல்லது.
"ஏன் அப்படி சொன்னே.. அப்படி சொல்ல கூடாதும்மா.. வற்புறுத்திய தாய்.. பூரிக்க வைத்த மகள் தமிழிசை
வங்கிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு, இதன் மூலமாவது மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். வங்கிகளை இணைப்பதால் மட்டுமே மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார் இளங்கோவன்.