10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு.. தென்காசி திமுக உறுப்பினர் விலகல் கடிதம்
தென்காசி: 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளதால் அதை கண்டிக்கும் வகையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
நலிந்த பொதுபிரிவினருக்கும் இடஒதுக்கீடு தேவை என கருணாநிதி போராடியதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் அவர் சார்ந்த திமுக தற்போது எதிர்க்கிறது என பாஜக விமர்சனம் செய்தது. இந்நிலையில் தென்காசியை சேர்ந்த திமுக உறுப்பினர் ஒருவர் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு திமுக எதிர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் தனக்கு கட்சியில் வழங்கப்பட்ட பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக திமுக தலைமை கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதம்: