For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. பலர் படுகாயம்!

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..வீடியோ

    திருநெல்வேலி: நெல்லை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

    நெல்லை - சாத்தூர் அருகே வரகனுரில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து அருகே இருந்த சிறிய சிறிய ஆலைகளிலும் இந்த விபத்து பரவ தொடங்கியது.

    Thirunelveli - Sattur Crackers Factory blast: 5 people died in the unexpected accident

    இதனால் வரிசையாக நிறைய கட்டிடங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

    Thirunelveli - Sattur Crackers Factory blast: 5 people died in the unexpected accident

    ஆனால் தீ வேகமாக பரவுவதால் அங்கு மீட்பு பணி மிகவும் சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    Thirunelveli - Sattur Crackers Factory blast: 5 people died in the unexpected accident

    வரகனுரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து இருக்கிறது. உள்ளே ஆலையில் இன்னும் நிறைய பேர் சிக்கி இருக்கிறார்கள். இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    English summary
    Thirunelveli - Sattur Crackers Factory blast: 5 people died in the unexpected accident, rescue goes on full swing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X