கருவாடு உலர் தளத்தை அப்புறப்படுத்த அறிவிப்பு-வீடியோ
Published : July 17, 2018 11:13 AM (IST)
நாகையில்,கருவாடு உலர் தளத்தை அப்புறப்படுத்த மீன்வளத்துறையின் அறிவிப்பை கண்டித்து,கருவாடு உற்பத்தி பெண்கள்,போலீசார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை,அக்கரைப்பேட்டை,கடுவையாற்று ஓரத்தில்,மீனவப் பெண்கள் 200 க்கும் மேற்பட்டோர் கருவாடு உற்பத்தி பணியில் நான்கு தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கருவாடு உலர் தளம் அருகே சில ஆண்டுகளுக்கு முன் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட்டதையடுத்து, மீன்வளத்துறை கட்டுப்பாட்டிற்குள் கருவாடு உலர் தளம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கருவாடு உலர் தளத்தை அப்புறப்படுத்த மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவப் பெண்கள், மீன்பிடித் துறைமுக பகுதியில் காலியாக கிடக்கும் இடத்தில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கருவாடு உலர் தளத்தில் உள்ள கீற்றுக் கொட்டகைகளை, மீன்வளத்துறையினர் அப்புறப்படுத்தப் போவதாக கிடைத்த தகவலால், அப்பகுதியில் மீனவப் பெண்கள் கைகளில் மண்ணெண்ணெய் கேன்களுடன் குவிந்தனர். அங்கு வந்த போலீசார் மீனவப் பெண்களை சமாதானப்படுத்தினர்.அப்போது ஆவேசத்துடன் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கதறிய மீனவப் பெண்களில் ஒருவர் மயக்கமடைந்தார். உடனிருந்தவர்கள் மயங்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் போலீசார்,தாசில்தாருடன் பேசி சமரச தீர்வு காண்பதாக அளித்தஉறுதியையடுத்து சமாதானமடைந்த மீனவப் பெண்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.போலீசார் முன்னிலையில் மீனவப் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Up Next
03:09
Pakistan பெண்ணுக்கு India-வில் கிடைத்த இதயம் | Heart Transplant Chennai
2 hours ago
03:26
Nayiar Nagendran-க்கு சொந்தமான பணமா பிடிபட்ட ரூ.4 கோடி?