மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமூர்த்திமலையில் புகழ் பெற்ற மும்மூர்த்திகளும் உள்ள அமண லிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பஞ்ச லிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கோயிலை சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோயிலில் சாமி தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு செல்ல கோவில் நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் தேனி மாவட்டம் சுருளி அருவி மற்றும் கும்பக்கரை அருவிகளில் சுற்றுல்லா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுல்லா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Up Next
03:38
வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
20 hours ago
03:17
கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
20 hours ago
02:10
வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil