கார் விபத்தில் மறைந்த தொலைக்காட்சி நிருபர் ஷாலினியின் உடலுக்கு பொதுமக்கள் பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தினர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள பள்ளப்பட்டியில் மாலைமுரசு அலுவலகத்தில் பணிபுரியும் தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்ற, மாலைமுரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினி மற்றும் அலுவலக நண்பர்கள் ராம்குமார் , சதீஷ், கோகுல் , பிரபுராஜ் ஆகியோர் நேற்று முந்தினம் சென்னை திரும்பிய போது மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் , அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷாலினி உயிர் இழந்தார்.காயமடைந்த மற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .மேலும் ஈரோட்டில் ஷாலினி வீட்டில் வைக்கபட்ட ஷாலினியின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தினர் ஷாலினியின் மறைவுச் செய்தி பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Up Next
07:04
தமிழிசையின் தேர்வு தூத்துக்குடியா? புதுச்சேரியா?
21 hours ago
04:02
PM Modi Launch செய்த 10 New Vande Bharat Express! Chennai-Mysore-க்கு 2nd Train!