Varalakshmi N       May 17, 2026

AI-IMAGE

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

தமிழர் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் பெறும் அத்தி மரம்,       அதன் இலை, பட்டை, பால் மற்றும் பழம் ஆகிய அனைத்தும் பல்வேறு       நோய்களுக்கு இயற்கை மருந்தாக பயன்படுகின்றன.

உடல்நலத்தை மேம்படுத்தி பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அத்தி       மரத்தின் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

அத்தி மரத்தின் இலை, பால், பழம் ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அத்தி இலைகளை உலர்த்தி பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் குறையும்.

வாய்ப்புண், ஈறு வீக்கம், சீழ்ப்பிடித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அத்தி இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரால் வாய் கொப்பளித்து       வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

அத்தி மரப்பட்டையை இரவில் நீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை       குடித்து வந்தால் வாதநோய் மற்றும் மூட்டு வலிகள் குறையும். மேலும்,       அழுகிய புண்களை கழுவ வெளிப்புற மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

சிறுநீர்ப்பை புண், சிறுநீரக கற்கள், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல்       சோர்வு மற்றும் உடல் அசதி போன்ற பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் சிறந்த பலன் அளிக்கிறது.

தினமும் அரை கிராம் காட்டுத்தி பழத்தை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளி மற்றும் தோல் நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் குறைய உதவும் என பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது.

AI-IMAGE

இயற்கை மருத்துவத்தில் தனித்துவமான இடம் பெற்றுள்ள அத்தி மரம்,  பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு பாதுகாப்பான இயற்கை தீர்வாக  விளங்குகிறது.

சரியான முறையில் பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் அளிக்கும் அரிய மூலிகையாக அத்தி மரம் திகழ்கிறது.