Sidhanathan K       Jan 23, 2025

அடிக்கடி பீர் அருந்துவது நல்லதா..? கெட்டதா..?

பீர் அருந்துவது அதன் டையூரிடிக் பண்புகள் காரணமாக சிறுநீரகக் கற்களை குணப்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் கட்டுக்கதையாகும்.

பீரின் டையூரிடிக் பண்புகள் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இது சிறிய கற்களை (3 மி.மீ.க்கும் குறைவாக) வெளியேற்றுவதை எளிதாக்குகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான முறையாகும்.

பீர் நுகர்வு கடுமையான நீரிழப்புக்கு வழிவகுக்கும். குறிப்பாக வெப்பமான காலநிலையில், சிறுநீரகக் கல் உருவாவதற்கு இது மிகவும் முக்கியமான காரணியாக இருக்கும்.

நீண்ட காலத்திற்கு பீரை உட்கொள்வது ஆக்சலேட் ஏற்றத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில் பீரில் அதிக ஆக்சலேட் உள்ளடக்கம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாக்குவதற்கு முக்கியக் காரணியாகும்.

பீரில் உள்ள கலோரி அடர்த்தியானது விரைவான எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமாவது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

பீர் அதிகமாக உட்கொள்ளும் போது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும். கல்லீரலுக்கு ஏற்படும் சேதம் கல்லீரலை சுத்தப்படுத்துவதன் சிறிய நன்மையை பாதிக்கலாம்.

மிதமான அளவு மது அருந்துவது இதய நோய் அபாயத்தை குறைப்பதாகக் கூறப்பட்டாலும், அதிகப்படியான பீர் நுகர்வு அதற்கு முற்றிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், தினசரி பீர் குடிப்பது உட்பட அதிக மது அருந்துதல், உயர் இரத்த அழுத்தம், கார்டியோமயோபதி மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களை உருவாக்கும் என்று கண்டறிப்பட்டுள்ளது.

தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கூற்றுப்படி, கல்லீரல், மார்பகம், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் உட்பட பல வகையான புற்றுநோய்களுக்கு பீர் நுகர்வு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது.

பீரில் உள்ள எத்தனால் அசிடால்டிஹைடாக வளர்சிதை மாற்றம் செய்யப்படுகிறது. இது புற்றுநோய் செல்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.