புகைபிடித்தல் நமது உட்புற ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நமது தோற்றத்தை நிரந்தரமாக மாற்றுகிறது.
புகைபிடித்தல் நமது தோல், முடி மற்றும் கண்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சிகரெட் புகையில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் சருமத்தின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து உடல் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
புகைபிடிப்பதால் சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உண்டாகி வயதான தோற்றத்தை அளிக்கிறது.
புகைபிடித்தல் இரத்த நாளங்களை சுருக்குகிறது. மேலும் இது சருமத்திற்கு செல்லும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவையும் குறைக்கிறது.
புகைபிடித்தல் முடியை கொடுக்கக்கூடிய மெலனின் உற்பத்தியை சீர்குலைக்கிறது.
இதன் விளைவாக நிறமாற்றம், முன்கூட்டிய முடி நரைத்தல் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
புகைபிடிப்பதால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அதிகரிப்பு கண்புரை உருவாவதற்கு காரணமாகிறது.
புகைபிடிப்பவர்களுக்கு குருட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான மாகுலர் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
புகைபிடித்தல் கண்களை எரிச்சலூட்டுகிறது. இதன் விளைவாக சிவத்தல், அரிப்பு மற்றும் கண்ணீர் உற்பத்தி அதிகரிக்கிறது.