Sidhanathan K       May 05, 2023

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எப்படி அடையாளம் காண்பது?

கோடை என்றாலே மார்க்கெட்டில் மாம்பழ விற்பனை சூடுபிடிக்கும்.

மாம்பழங்களை விரைவாக பழுக்க வைக்க இரசாயன முறையை பயன்படுத்துகிறார்கள்.

செயற்கை முறையில் பழுக்க வைக்க மாம்பழங்களுடன் கால்சியம் கார்பைடு சேர்க்கப்படுகிறது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கால்சியம் கார்பைடு (CaC2) பயன்பாட்டை தடை செய்துள்ளது.

பெரும்பாலும் வெல்டிங்கில் பயன்படுத்தப்படும் இந்த கால்சியம் கார்பைடு புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளை கொண்டது.

இவ்வாறு இரசாயன முறையில் பழுத்த மாம்பழங்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு, பலவீனம், தோல் புண்கள், நிரந்தர கண் பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

மேலும், சில நேரங்களில் தலைவலி, தலைச்சுற்றல், தூக்கம், குழப்பம், நினைவாற்றல் இழப்பு, பெருமூளை எடிமா போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

இரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டது எது, இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது எது என்பதை எளிதில் அடையாளம் காணலாம்.

முதலில் மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போட்டு, தண்ணீரில் மிதந்தால், அவை இரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. மூழ்கினால் அவை இயற்கையானவை.

இரசாயன முறையில் பழுத்த மாம்பழங்களில், மேற்பரப்பு முற்றிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில இடங்களில் மட்டும் பச்சை நிற திட்டுகள் இருக்கும்.

ஆனால் இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் பச்சையும் மஞ்சளும் ஒரே சீரான கலவையாக இருக்கும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories