Sidhanathan K       Feb 23, 2024

இந்தியாவில் மகப்பேறு இறப்புக்கான சில முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா..?

கர்ப்பம் என்பது பெண்களுக்கு அழகான தருணம் என்றாலும், சிலருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படலாம். கர்ப்பகால சிக்கல்களின் அதிக ஆபத்து கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

அதிக ஆபத்துள்ள கர்ப்பம் தாயின் மரணத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவில் தாய்வழி இறப்புக்கான காரணங்கள் உடல்நல பராமரிப்பில் உள்ள வேறுபாடுகள் முதல் வயதான கர்ப்பம் வரை வேறுபட்டவை.

இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் இறப்புக்கு கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இப்போது இந்தியாவில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள சில கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதி கிடைப்பது மிகக் குறைவு. மோசமான சுகாதாரம் மற்றும் போதுமான மகப்பேறு சேவைகள் இல்லாதது கூட தாய்வழி இறப்புக்கு பங்களிக்கின்றன.

பெண்களுக்கு தேவையான கவனிப்பு கிடைக்காமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதி கிடைப்பது மிகக் குறைவு.

பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு தாய் இறப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ஒரு குழந்தையை சுமக்கும் போது பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் ஏற்படும் தொற்றுகள் கூட தாய் இறப்புக்கு வழிவகுக்கும்.

ஒரு பெண் பிரசவத்திற்கு முன் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற ஏதேனும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பிரசவத்தின் போது அதிக ஆபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிகளின் வயதுக்கேற்ப கர்ப்பத்தின் ஆபத்து அதிகரிக்கும். அதாவது 35 வயதிற்கு மேற்பட்ட பல பெண்களுக்கு ஆரோக்கியமான கர்ப்பம் இருந்தாலும், மகப்பேறியலில் அத்தகைய கர்ப்பங்கள் மேம்பட்ட தாய்வழி வயது என்று அழைக்கப்படுகிறது.

கலாச்சார நடைமுறைகள், மூடநம்பிக்கைகள் ஆகியவை இன்றளவும் தாய்வழி பராமரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏழ்மை, கல்வி மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை தாய் சேய் இறப்புக்கு பங்களிக்கின்றன.

மகப்பேறு இறப்பு குறித்து எந்த உறுதியும் இல்லை என்றாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை தடுக்கக்கூடியவை. எனவே விழிப்புடன் செயல்பட்டு மகப்பேறு இறப்புகளை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories