Sidhanathan K       Aug 29, 2023

இனி இ-சேவை மையங்களில் பணம் எடுக்கலாம்..!!

தமிழக அரசின் பொது இ-சேவை மையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் செயல்பட்டு வருகிறது.

தமிழக மின்னணு நிறுவனம் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன

இந்த நிலையில், இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டு உள்ளது.

அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து பணம் எடுக்கும் வகையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வசதி கிராமப்புற பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories