Tap to Read ➤

'ஓவியம் பற்றிய அரிய தகவல்கள்!'

ஓவியனுள்ளத் துள்ளியது வியப்போன்
varalakshmi n
எண்ணெய் ஓவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டப்பட்டது தேவதாரு (pine) மரத்தின் பிசின்கள் (resins) பெறப்படும் சாம்பிராணி (frankincense) குங்கிலியம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து நெய்வனங்கள் (varnishes) தயாரிக்கப்படுகின்றன,அவை ஓவியத்திற்கு பளபளப்பாக்கவும் தரும்,எண்ணெயை பொறுத்துக் காயும் நேரம்,பழுப்படையும் தன்மை மாற்றங்கள் ஏற்படும்
நீர் வர்ணம் என்பது நீரைக் கரைப்பானாகக் வண்ணம் தீட்டப்படும் பாரம்பரியமாக காகிதங்களில் தீட்டப்படுகின்றன,ஓலை, மரப்பட்டை காதிதங்கள்,தோல்கள், செயற்கைத் துணிகள் பயன்படுத்தப்படுகின்றன,இந்தியா,எத்தியோப்பியா நாடுகளிலும் ஓவியங்கள் பாரம்பரியமாகக் வரையப்பட்டு வருகின்றன
சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் சுதை ஓவியம் எனப்படுகிறது.சுவர்கள்,உட்கூரைகள் கட்டமைப்புக்கள் மீது தீட்டப்படுகிறது. இலங்கையில் உள்ள சிகிரியா குன்றில் மேலேறும் வழிகளில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன,இந்தியாவில் உள்ள அஜந்தா குகைகளும் இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன
சூடான மெழுகு ஓவியங்கள் நிறமிகள் கலக்கப்பட்ட சூடாக்கப்பட்ட தேனீ மெழுகு பயன்படுத்தப்படும்,
பசைபோலத் தயாரிக்கப்பட்டு,மரம்,போன்ற பொருட்களில் ஓவியம்
 தீட்டப்படும்.ஆளி(செடி)விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்ற பதார்த்தமும் பயன்படுத்தப்படும்
உடலில் வர்ணங்களை பூசி ஓவியமாக வரைவது உடல் ஓவியமாகும். இந்த வகையான ஓவியங்கள் பெரும்பாலும் விழாக்கள், நிகழ்வுகளுக்காக வரையப்பெறும் அந்நிகழ்வு முடிந்ததும் அழிக்கப்பட்டுவிடுகின்றன.முகத்தில் வர்ணங்களால் வரைந்து கொள்பவை, முக ஓவியமாகும்
அனைத்துவகையான துணிகளைக் கொண்டு துணி ஓவியம் வரையப்பெறுகிறது. இவ்வகை ஓவியத்தில் ஜெய்ப்பூர் கற்கள், ஜரிகை நூல்கள் போன்றவையும் இணைத்து அழகு சேர்க்கப்படுகிறது
முப்பரிமாண ஓவியங்களும் மூன்று கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பெறுகின்றன,இவ்வகையான முப்பரிமாண ஓவியங்களில் தொலைவிலுள்ள பொருள்கள் முன்புற கண்ணாடியிலும், நடுவில் உள்ள பொருள்கள் நடுக்கண்ணாடியிலும், மீதக் காட்சிகள் முதல் கண்ணாடியிலும் வரையப்படுகின்றன
சுண்ணாம்பு, மரப்பிசின் மூலிகைகள் கொண்டு குகைகளிலுள்ள பாறைகளில் வரையப்படும் இந்த வகையான ஓவியங்கள் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிய பயன்படுகின்றன