Tap to Read ➤

வாங்கிய மறுநாளே வெடித்துச் சிதறிய இ ஸ்கூட்டர்!

Electric scooter battery explosion in Vijayawada.
Shyamsundar I
ஆந்திராவின் விஜயவாடாவில் இ ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி, மூவர் படுகாயம்.
40 வயதான நசிவகுமார் கடந்த வெள்ளிக்கிழமை தான் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.
ஸ்கூட்டரை வாங்கிய மறுநாள் இரவு நேரத்தில் வழக்கம் போல அதை சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது அதிகாலை 3.30 மணியளவில் ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது.
இதனால் மூச்சு திணறி நசிவகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது மனைவி ஹாரதி (30), மற்றும் குழந்தைகள் பிந்து ஸ்ரீ (10), சசி (6) ஆகியோருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
புகையைச் சுவாசித்தால் அவர்கள் உடல்நிலை மோசமாக உள்ளதால், தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இ ஸ்கூட்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டு வரும் சூழலில், இது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு சிறப்பு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது.