Sidhanathan K       Jun 15, 2023

வாகனத்திற்கு PUC சான்றிதழின் அவசியம் என்ன..?

மத்திய மோட்டார் வாகன விதி 1989ன் கீழ், இந்திய அரசு PUC (Pollution Under Control) சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளது.

செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டின் கீழ் (PUC) சான்றிதழ் இருந்தால் மட்டுமே எந்தவொரு வாகனமும் நாட்டின் சாலைகளில் இயக்க முடியும்.

எனவே ஆர்.சி புக், லைசென்ஸ் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை போலவே, இந்த சான்றிதழும் அனைத்து இந்திய ஓட்டுநர்களுக்கும் அவசியமானதாகும்.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை சுற்றுச்சூழலை பெருமளவில் மாசுபடுத்துகிறது.

PUC சான்றிதழ் என்பது அங்கீகரிக்கப்பட்ட மாசு பரிசோதனை மையங்களால் வாகனத்தின் உமிழ்வுகளை பரிசோதித்த பிறகு வழங்கப்படும் சான்றிதழ் ஆகும்.

வாகனத்தின் மாசு உமிழ்வு, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் உள்ளதா என்பதை உமிழ்வு சோதனை அளவிடுகிறது.

வாகனம் உமிழ்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு PUC சான்றிதழ் வழங்கப்படுகிறது. வழங்கக்கூடிய PUC சான்றிதழ் 1 வருட காலத்திற்கு செல்லுபடியாகும்.

PUC சான்றிதழை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் அரசாங்கத்துடன் இணைந்த PUC மையங்கள் மற்றும் RTOகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெறலாம்.

இந்த சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.400 லிருந்து 2000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories