Sidhanathan K       Oct 28, 2024

23 நடைமேடைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா..?

தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட ரயில்களை கையாளும் ஹவுரா ரயில் நிலையம் இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த இரயில் நிலையம் 1854 ஆம் ஆண்டு ஹவுராவிலிருந்து ஹூக்ளி வரையிலான கிழக்கு இந்தியாவின் முதல் ரயில் பயணத்துடன் இணைக்கப்பட்டது.

கிழக்கு இந்தியாவில் ரயில் போக்குவரத்திற்கான முதன்மை நுழைவாயிலாக ஹவுரா நிலையம் செயல்படுகிறது. இது மேற்கு வங்காளத்தை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

1854 இல் நிறுவப்பட்ட ஹவுரா ரயில் நிலையம் மேற்கு வங்காளம் தவிர பல்வேறு பகுதிகளுக்கு முக்கியமான இணைப்பை வழங்குகிறது.

ஹவுரா ரயில் நிலையம் மொத்தம் 23 நடைமேடைகளை கொண்ட நாட்டின் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

ஹூக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஹவுரா ஸ்டேஷன் காலனித்துவ கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.

பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஹல்சி ரிக்கார்டோவால் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் நிலைய கட்டிடம், விக்டோரியன் மற்றும் கோதிக் பாணியில் சிவப்பு செங்கல் முகப்புடன் கூடிய ஒரு அற்புதமான கட்டமைப்பாகும்.