ராமதாஸின் பெயர் "தமிழ்க் குடிதாங்கி": திருமாவளவன் சூட்டினார்!
சென்னை:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நாங்கள் தமிழ்க் குடிதாங்கி என்றுதான் அழைக்கிறோம். அதுமுழுமையானதமிழ் பெயர் தான் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படுவதை எதிர்த்து ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர்போர்க்கொடி தூக்கியுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களை திரையிடுவதை எதிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும்ராமதாஸ் என்ற பெயரே தமிழ்ப் பெயர் கிடையாதே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந் நிலையில் திருமாவளவன் இது குறித்துக் கூறுகையில்,
தமிழ்நாட்டில் டாக்டர் ராமதாஸை யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை. மருத்துவர் அய்யா என்றுதான்அழைக்கிறார்கள். நாங்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) தமிழ்க் குடிதாங்கி என்றுதான் அழைக்கிறோம். இதுமுழுமையான தமிழ் பெயர் ஆகும்.
பாமகவினரும் இனிமேல் தமிழ்க் குடிதாங்கி என்றுதான் ராமதாஸை அழைக்க வேண்டும். இந்தியாவில்மொழிக்காக உயிரிழந்த வரலாறு கொண்ட ஒரே இனம் தமிழர் இனம்தான்.
திரையுலகினர் பூச்சாண்டி காட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களது வேண்டுகோளை மீறிபிற மொழி பெயர் சூட்டினாலோ, தமிழ் சீரழிவு காட்சிகளை அமைத்துப் படம் எடுத்தாலோ, உயிரை விலையாகக்கொடுத்தாவது தடுப்போம் என்றார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications