14 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடமை
சென்னை:மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை உள்ளிட்ட 14 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடமையாக்கப்படுவதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின்படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின்மரபுரிமையினருக்குப் பரிவுத் தொகைகள் அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சக்தி வை.கோவிந்தன், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், த.நா.குமாரசாமி, கா.சு.பிள்ளை, புலவர்குலாம் காதிர் நாவலர், வை.சதாசிவப் பண்டாரம், டாக்டர் சி.இலக்குவனார், மகாவித்வான் தண்டபாணி தேசிகர்;
தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர), நாரண துரைக்கண்ணன், டாக்டர் மா.ராசமாணிக்கனார், டாக்டர் வ.சுப.மாணிக்கம், புலவர் கா.கோவிந்தன் ஆகிய 14தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்படும்.
அவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்தாருக்கும் தலா 6 லட்சம் ரூபாய் வீதம் பரிவுத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications