Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலி ஆதரவு கட்சிகளுடன் உறவு இல்லை-காங்

Subscribe to Oneindia Tamil

Thangabalu
டெல்லி: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் எந்த உறவும் வைத்துக் கொள்ளாது என அக் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் சிலர் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசும் யாருடனும், எந்த கட்சியுடனும் காங்கிரஸ் எந்த உறவும் வைத்துக் கொள்ளாது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தெளிவான நிலையைக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

காங். எம்எல்ஏக்கள் கூட்டம்:

இதற்கிடையே புலிகளை ஆதரித்துப் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை பதவி விலகக் கோரிய வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், அருள் அன்பரசு ஆகியோர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந் நிலையில் சட்டசபை வளாகத்திலுள்ள காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடந்தது.

அதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், அருள் அன்பரசு, ஜான் ஜேக்கப், வேல்துரை, அசன் அலி, சிவராஜ், பழனிச்சாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழக அரசுக்கு எதிராக ஆவேசமாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் பேசுவோர் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருவதாகவும் இதை அரசு கண்டும் காணாமல் இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க சட்டமன்ற காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களை சுதர்சனமும், பீட்டர் அல்போன்சும் சமாதானப்படுத்தினர்.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுதர்சனம், இன்று நடைபெற்றது முறையான எம்எல்ஏக்கள் கூட்டமல்ல. வெகு விரைவில் அக்கூட்டம் நடைபெறும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தனித் தமிழ்நாடு கோஷத்தை சிலர் (மதிமுக பொருளாளர் கண்ணப்பன்) எழுப்பியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+