சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பழிவாங்க திட்டம்.. காஷ்மீரில் 250 பாக்.தீவிரவாதிகள் ஊடுருவல்?
ஸ்ரீநகர்: சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் யூரி ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது, கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை இந்திய ராணுவத்தினர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு தீவிரவாத அமைப்புகள் பதிலடி கொடுக்க இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்பறப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நாடு முழுவதும் உச்சகட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா , ஜேசி முகமது , ஹிஸ்புல் முகாஜுதீன் போன்ற அமைப்பை சேர்ந்த 250 தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஊடுருவி இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து எல்லை கட்டுப்ப்பாடு பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுளள்ன. பண்டிகை காலம் என்பதால் தீவிரவாதிகள் அதனை சீர்குலைக்க கூடும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திலும் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications