For Quick Alerts
For Daily Alerts
Just In
ஹைதராபாத்தை இந்தியாவில் இருந்து விடுவித்து மீண்டும் நிஜாம் ஆட்சி- இது அல்-கொய்தாவின் ரகசிய பிரசாரம்!
ஹைதராபாத்/சென்னை: இந்தியாவில் ஹைதராபாத்தை விடுவித்து அங்கு மீண்டும் நிஜாம்கள் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று பிரசாரத்தை மேற்கொண்டு அல்கொய்தா இயக்கம் முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் சேர்த்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிரவாதிகளுக்கு உளவுத் தகவல்களை பரிமாறியதாக அண்மையில் ராணுவ சுபேதார் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஏராளமான தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பினருக்குக் கிடைத்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் தளம் அமைத்து தாக்குதல்கள் ஈடுபட முயற்சிப்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்த தகவல்கள்:
- இந்தியாவில் அல்கொய்தா இயக்கம் தனது தலைமையகத்தை ஹைதராபாத்தில் நிறுவுவதற்கான சதியில் ஈடுபட்டு வருகிறது.
- தமிழகம், கேரளா, கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை அல்கொய்தாவில் இணைப்பதற்கு ஹைதராபாத் சரியான தலைநகரம் எனக் கருதப்படுகிறது.
- ஹைதராபாத்தை இந்தியாவிடம் இருந்து விடுவித்து மீண்டும் நிஜாம் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற பிரசாரத்தை முன்வைத்தே அல்கொய்தாவுக்கான ஆட்சேர்ப்பு முயற்சி நடைபெறுகிறது.
- மோட்டாசிம் என்பவரது முயற்சியில்தான் ஹைதராபாத்தில் அல்கொய்தா தலைமையகம் அமைக்கவும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
- ஹைதராபாத்தில் 8 சிலீப்பர் செல்கள் செயல்படுகின்றன. இந்த சிலீப்பர் செல்களில் ஏராளமான இளைஞர்கள் இணைந்துள்ளனர்.
- ஷாகித் பிலால் ஏற்கெனவே ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கத்தை ஹைதராபாத்தில் நிறுவியிருந்தார்.
- முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் போலீசாரின் அணுகுமுறைதான் அவர்களை தீவிரவாத இயக்கங்களுடன் இணைய வைக்கிறது.
- அல்கொய்தா இயக்கத்தில் உடனே இணைவதற்கு 350 இளைஞர்கள் தயராக இருக்கின்றனர்.
- கர்நாடகா, கேரளாவில் வலுவாக உள்ள சிமி அமைப்பும் தமிழகத்தின் அல் உம்மா அமைப்பும் இஸ்லாமிய சத்தார் சிபிர் என்ற இயக்கத்துடன் தொடர்பில் உள்ளவை. இவற்றுடன் அல்கொய்தாவும் கை கோர்த்துள்ளது.
- மேற்குவங்கத்தின் பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
Comments
English summary
Hyderabad was to be the epi-centre of the Al-Qaeda through which it was decided to target several youth from Kerala, Tamil Nadu and Karnataka. National Investigating Agency officials informed that it appears that the Al-Qaeda has been planning this operation for quite some time and a lot of information was leaked by the Subedar who was honey trapped. He had leaked information regarding several army officers and also the bases which may have been shared with the Al-Qaeda which has decided that Hyderabad would its base to further it cause of setting up the Al-Qaeda in the Sub-Continent or the AQIS.