பெங்களூர்வாசிகளே, யார் 50 ரூபாய் கொடுத்தாலும், உடனே வாங்கி பாக்கெட்டி்ல் போட்டுக்காதீங்க!
பெங்களூர்: பெங்களூரில் கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக 50 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் நம் நாட்டில் கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டு வருகிறது. மேலும் வங்கதேசத்தில் இருந்து தீவிரவாதிகள் பாகிஸ்தான் அளிக்கும் கள்ள நோட்டுகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருகின்றார்கள். இப்படி நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் கள்ளநோட்டு புழக்கம் சகஜமாகியுள்ளது. முன்னதாக 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் தான் புழக்கத்தில் இருந்தது. தற்போதோ 10 ரூபாய், 20 ரூபாய் அதிலும் குறிப்பாக 50 ரூபாய் கள்ளநோட்டுகள் பெங்களூரில் அதிகமாக புழக்கத்தில் உள்ளது.
காய்கறி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் என்று பலரிடம் பெறப்படும் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அதிகாரியான அருண் குமார் மோதக் என்பவரிடம் செய்தித்தாள் வினியோகிக்கும் நபர் 4 புது பத்து ரூபாய் நோட்டுகளை அளித்தார். அவரும் அந்த நோட்டுகளை மகிழ்ச்சியாக வாங்கினார்.
பின்னர் தான் அது போலி நோட்டுகள் என்று தெரியவந்து அந்த செய்தித்தாள் வினியோகஸ்தரை அழைத்து அவரிடம் அளித்தார். அந்த வினியோகஸ்தர் அது கள்ளநோட்டு என்று தெரிந்து தான் அளித்தார் என்பதை மோதக் தெரிந்து அதிர்ந்தார்.
சாப்ட்வேர் என்ஜினியரான அருணிமா என்பவர் ஆட்டோவில் பயணித்துள்ளார். அவரிடம் ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் நோட்டை அளித்தார். அதை சோதித்த அருணிமா அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்து அந்த டிரைவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். இவ்வாறு பெங்களூரின் பல்வேறு இடங்களில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications