இடஒதுக்கீடு கோரி பந்த்: குஜராத்தில் வெடித்த கலவரத்தில் 3 பேர் சாவு- ராணுவம் வரவழைப்பு!!
அகமதாபாத்: குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் அம்மாநிலம் முடங்கிப் போயுள்ளது. பல நகரங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஹர்திக் படேல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அம் மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடைபெற்றது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத், சூரத், மேஷனா, விஸ்நகர், உஞ்சா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பவங்கள் வெடித்ததையடுத்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை மத்திய அரசு அனுப்பும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக முதல்வர் ஆனந்திபென் தெரிவித்தார்.
இந்த பந்த் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சூரத் நகரில்நடந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அமைதிகாக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications